Skip to main content

பாஜக தனியாக நின்றால் ஜெயிக்காது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, ஊர் உலகத்துக்கே தெரியும்!! - மனம் திறந்த ராம சுப்பிரமணியன்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

gjh

 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், கூட்டணி பஞ்சாயத்து நடைபெற்றுவருகிறது. ஒருபுறம் பாமக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டுள்ள நிலையில், பாஜக அதிக சீட் கோரி அழுத்தம் கொடுத்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல், பாஜக கூட்டணி, அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் பதில்கள் வருமாறு, 


தமிழ்நாட்டில் அடுத்த பரபரப்பு என்றால் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல்தான். அனைத்து கட்சியினரும் அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்றும், ஆனால் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

பாமக தனியாக நின்று தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் நடைபெறும் அந்த 9 மாவட்டங்களில் தென்காசி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பாமக சற்று வலுவாகவே இருக்கிறது. எனவே தங்களின் பலத்தை தனியாக காட்ட வேண்டும் என்று அவர்கள் விருப்பப்படுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி தர்மம் என்ற ஒன்று உள்ளது. அதனை அவர்கள் மதிக்க வேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் ஒரு நிலைப்பாடு என்ற நிலைப்பாட்டை மக்கள் ஏர்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிகப்படியான இடங்களைக் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், இது பாஜகவுக்கு அதிமுக பெருந்தன்மையாக வாரிக்கொடுத்ததால் நடந்தது. பாஜக தனியாக நின்றால் ஒரு இடம் கூட ஜெயிக்காது என்பது அவர்களுக்கும் தெரியும், ஊர் உலகத்துக்கும் தெரியும். இந்த நான்கு பேரும் எப்படி ஜெயித்தார்கள். இதில் இருவர் திமுக, அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அதிமுகவின் கடுமையான உழைப்பினால் இது சாத்தியப்பட்டுள்ளது. தற்போது பாமக கூட்டணியைவிட்டு போனதால் தங்களுக்கு அதிக சீட், 25 சதவீத இடம் என்பதெல்லாம் சாத்தியமா? பாஜக கேட்டால் அதிமுக கொடுக்க முடியுமா? அவர்களுக்குள்ளாகவே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. ரெய்டு, கட்சி பிரச்சனை என போய்க்கொண்டிருக்கிறது. எனவே இடியாப்ப சிக்கலில் இருக்கும் அதிமுக, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பார்ப்பார்கள். இந்த நேரத்தில் பாஜக அதிக சீட் கேட்பது அபத்தமாக இருக்கிறது. அவர்களும் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறியுள்ளாரே? 

 

அண்ணாமலை பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர் அரசியலுக்குப் புதியவர். கள நிலவரம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தடா புடா என்று பேசி கட்சியை வளர்க்க முடியாது. உண்மையின் தன்மை தெரிய வேண்டும். இதைவிட பெரிய கூத்து, அடுத்த தேர்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கூறுகிறார். இது சாத்தியமா? கேவலமாக இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. இப்படி ஏடாகூடமாக பேசினால் அவர் மீது பொதுமக்களிடம் நல்ல பெயர் எப்போதும் வராமல் போய்விடும்.

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.