Skip to main content

இந்தியாவை சுற்றும் தமிழர்களின் தோழர் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

தமிழர்களின் பெருமைமிக்க பண்டிகையான பொங்கலை  இதுவரை இந்திய நாட்டு பிரதமர் கூட கொண்டாடியிருப்பாரா, தமிழர்களின்  விளையாட்டான  சிலம்பம் சுற்றியிருப்பாரா போன்ற கேள்விகளுக்கு தெரியாது என்பதே பதிலாக இருக்கும். ஆனால், கனடா  நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதையெல்லாம் செய்திருக்கிறார் என்று நாம் அடித்தே கூறலாம்.

justin in tajmahal


ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களின் மீது அத்தனை அன்பு கொண்டவர். தமிழர்கள் மீது மட்டுமல்ல, பொதுவாக அனைவரின் மீதும் அவருக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் உலக மக்கள் பலர் அவரை நேசிக்கின்றனர். இவர் தற்போது ஏழு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியாவுக்கு வந்த அவர், இந்தியாவின் முக்கிய இடங்களான டெல்லி, அஹமதாபாத் மற்றும் மும்பைக்கு சென்றிருக்கிறார்.

டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு சென்று காதல் சின்னமான "தாஜ்மஹாலை" தன் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.  தாஜ்மஹால் சென்றதை பற்றி ட்வீட் செய்த ட்ரூடோ, தனது பத்து வயதில் ஏற்கனவே அங்கு வந்த மெமரியை ஷேர் செய்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜஸ்டின் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டார். இந்த புகைப்படம் மட்டுமல்லாமல் விதவிதமாக போஸ்கள் கொடுத்தும் புகைப்படம் எடுத்திருக்கிறார், அதில் ஒரு போஸ் ஷாருக்கானை போன்று கையை விரித்து கொடுத்தார். தாஜ்மஹாலை பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணர் பிறந்த ஊர் என சொல்லப்படும் மதுராவுக்கு சென்ற அவர், கோவிலில் தரிசிக்க சென்றிருக்கிறார் என நினைத்துக்கொள்ளாதீர்கள், அங்கு இருக்கும் யானைகள் சரணாலயத்தை குடும்பத்துடன் பார்க்க சென்றிருக்கிறார். இங்கு எடுத்த புகைப்படங்களையும் டிவிட்டரில் பதிவிட்டுவிட்டார்.

justin in sabarmathi ashramam


டெல்லியில் இருந்து குஜராத்துக்கு கிளம்பி சென்றவர், ஏர்போர்ட்டில் அனைவருக்கும் தன் தோற்றத்தின் மூலம் ஷாக் கொடுத்தார். ஒன்றுமில்லை, கோட்டு சூட்டுல சுத்தினவர் குடும்பத்தோடு குர்தா அணிந்து வடஇந்தியராகவே மாறிவிட்டார். அன்றைய நாளில் முதல் பயணமாக சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். பின்பு அங்கு கதர் இராட்டையை சுற்றிப்பார்த்தார். காந்தி நகர் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.  அன்று மதியம் ஐஐஎம் கல்வி நிறுவனத்திற்கு சென்று மாணவர்களிடம் உரையாற்றினார்.  

justin with sharuk khan


ஜஸ்டின் ட்ரூடோ மும்பைக்கு சென்று தொழில்முறை கான்பிரன்சில் கலந்துகொண்டு உரையாற்றினார். பெண்களுக்கான தொழிலதிபர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். மாலையில், பாலிவுட்டுக்கும், கனடா திரைப்பட துறைக்கும் சில ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கானை சந்தித்து இருக்கிறார். மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்நாவிஸை சந்தித்து பொருளாதார வளர்ச்சியை பற்றி 20 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் சந்திப்பு ஒரு புறமிருந்தாலும், குடும்பத்துடன் தனது இந்திய பயணத்தை கொண்டாடுகிறார் தமிழர்களுக்கு விருப்பமான பிரதமர் ட்ரூடோ. இவரது பயணத் திட்டத்தில் தமிழகம் இல்லை என்பது ஏமாற்றமே.

 

Next Story

இந்தியாவுடன் மோத விரும்பவில்லை” - கனடா பிரதமர்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Canadian Prime Minister says Doesn't want to clash with India

 

கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

 

அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

 

மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது. இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் சேவைகளை மறு அறிவிப்பு வரும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கனடாவுடனான உறவில் விரிசல் சரியாகும் நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வர கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் மீண்டும்  விசா சேவையை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம், கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வர வழிவகை செய்யப்பட்டது.

 

இந்த பிரச்சனை பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “இந்தியாவுடனான சண்டையை கனடா இப்போது விரும்பவில்லை.  ஆனால், ஹர்தீப் சிங் நிஜார் கொலை தொடர்பான விசாரணையில் ஒன்றிணைந்து செயல்படுமாறு இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம். பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறினால், முழு உலகத்திற்கும் ஆபத்தாகி விடும். எனவே, இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா விரும்புகிறது. 

 

ஆரம்பத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை இந்திய அரசும், உலக நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள உண்மையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். ஆனால், இந்தியா வியன்னா உடன்படிக்கையை மீறி தூதரக அதிகாரிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து அவர்களை வெளியேற்றியது. இதனால், நான் ஏமாற்றமடைந்து கவலையடைந்தேன். இது உலகெங்கும் உள்ள உலக நாடுகளுக்கும் கவலை அளிக்கிறது. 

 

ஏனென்றால், ஒரு நாடு மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளை பாதுகாக்காவிட்டால், அது சர்வதேச உறவுகளுக்கு ஆபத்தாக மாறிவிடும். அதனால், ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் பணியாற்றி முயற்சித்தோம். தொடர்ந்து அவ்வாறே செயல்படுவோம். இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதனால், நாங்கள் இப்போது சண்டை செய்ய விரும்பவில்லை. ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காக சண்டை செய்வோம்” என்று கூறினார். 

 

 

 

 

Next Story

“இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர விரும்புகிறோம்” - கனடா பிரதமர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 Canadian Prime Minister says We want to continue our constructive relationship with India

 

கனடாவில் உள்ள பயங்கரவாத புலிப்படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், பயங்கரவாத புலிப்படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகப் பயங்கரவாத தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதி நிஜார் கொலைக்கு இந்திய உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், கனடா தூதரக அதிகாரியிடம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 

 

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப பெற வேண்டும் என்று கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

 

இது குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்துத்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, “ கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது மிகவும் அவசியம். வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தை கடந்து வருகிறோம். நிலைமையை மேலும் தீவிரப்படுத்த விரும்பவில்லை. அதனால், இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.