Skip to main content

எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் நடக்கும் கொடுமை... கொந்தளிப்பில் மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

முதல்வரின் மாவட்டத்திலிருந்து இன்னொரு குமுறல் இது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கை முகமாக விளங்கும் சேலம் ஆவின் நிர்வாகம், ஏரியா மக்களின் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது. சேலத்தை அடுத்த தளவாய்ப் பட்டியில், 1984-ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இது 54 ஏக்கர் பரப்பளவு கொண்டது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வணிகம் செய்யும் நிறுவனமாகவும் இது வளர்ந்திருக்கிறது. எனினும் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்த தளவாய்ப்பட்டி கிராம மக்களை அது வஞ்சிப்பதாக அம்மக்கள் புகார் வாசிக்கின்றனர். 

 

admk



இது குறித்து சூழலியல் ஆர்வலர் சிவராமன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.’"ஆவினில் பால் பதனிடுதல், பால் பொருள்கள் தயாரித்தல், பால் கேன்கள், டேங்கர் லாரிகளை சுத்தம் செய்தல், பாய்லர் கிளீனிங் என தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, பண்ணைக்குள்ளேயே திறந்த வெளியில் தேக்கி வைக்கின்றனர். இது சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கழிவு நீராக வெளியேறுகிறது. இதன் பாதிப்பால் தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அது கலந்துவிட்டது. அதனால் அங்கே எங்கே தோண்டினாலும் கழிவு நீர் ஊற்று நீர் போல் வந்துவிடும். அங்கே சண்முகம் என்பவர் வீட்டுக்குள் சிமெண்ட் தரையை உடைத்துக்கொண்டு 24 மணி நேரமும் நீரூற்றாக வெளியேறுகிறது. இதனால் கடந்த 35 ஆண்டுகளாக கழிவுநீரோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில், இந்த ஆவின் கூட்டுறவு நிறுவனத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இயக்குநராக தன் அரசியல் வாழ்வின் பொறுப்பைத் தொடங்கினார். ஆனால் முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், ஆவின் நிர்வாகம் என பலரிடமும் புகார் அளித்தும் இதுவரை எங்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை'' என்றார் வருத்தமாக.

 

village



ரொட்டிக்காரன் வட்டத்தில் சண்முகம் (40) என்பவரின் வீட்டை நேரில் பார்த்தோம். சுமார் 500 சதுரஅடி பரப்பு கொண்ட அந்த வீடு முழுக்கவே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. எந்நேரமும் தண்ணீரில் நடந்து நடந்து சண்முகம், அவருடைய பெற்றோர் ஆகியோரின் கால் பாதங்கள், விரல்கள் சேற்றுப் புண்ணால் அழுகிப்போகும் நிலையில் இருந்தன. அவரின் தந்தையோ சமையல் அறைக்குள் தேங்கிய ஊற்றுநீரை பிளாஸ்டிக் முறத்தில் அள்ளி அள்ளி வெளியே ஊற்றிக் கொண்டிருந்தார்.

"கடந்த 35 ஆண்டுகளாக இந்த நரக வாழ்க்கையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்''’என்றார் சண்முகம் கலக்கமாக. இங்குள்ள 14 பேரின் வீடுகளிலும் இந்த கழிவு நீர் நீரூற்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது.


அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் தங்கராஜ், நாராயணன், மாரியம்மாள் ஆகியோர், ''எங்கள் வயல்களில் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன. கால்நடைகளுக்கு சோளத்தட்டு பயிரிட்டும் கூட, அதை அறுவடை செய்ய முடியாத நிலையில், காசுக்கு வாங்கி வந்து போடும் நிலையில் இருக்கிறோம். முதல்வர் எடப்பாடி ஒருமுறையாவது இங்கு வந்து எங்கள் நிலையைப் பார்க்கவேண்டும்,'' என்றார்கள் பரிதாபமாக.

 

Seshan



இதற்கிடையே ஆவினின் கழிவுநீரை, தளவாய்ப்பட்டி ஏரிக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ஆவின் மேற்கொண்டது. ஆனால் விவசாயிகள் சிலர், ஏரியில் கழிவுநீரை தேக்கினால் அந்தப் பகுதியிலும் நிலத்தடி நீர் மாசுபடும் என்று போர்க்கொடி தூக்கினர்.

இப்பகுதி மக்களின் குமுறல்களை விளக்கி, இப்பகுதியில் இருக்கும் 33 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என ஆவின் பொது மேலாளர் விஜய்பாபுவிடம் கோரிக்கையை நாம் வைத்தோம். எல்லாவற்றையும் நிதானமாக கேட்டுக் கொண்டார் விஜய்பாபு.

உடனே அவர் ரொட்டிக் காரன் வட்டம் முழுவதும் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய விஜய் பாபு... "ஆவினில் தேக்கி வைக்கப்படுவது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான். அது கழிவு நீர் அல்ல. ஆவினுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செலவையும் ஆவின் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள ஆனதைச் செய்கிறோம். பசுமை வீடுகள் கட்டித்தரப்படும், தளவாய்ப்பட்டி மக்களை அழைத்து விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.


இது தொடர்பாக நாம் தனியார் நில அமைப்பியல் வல்லுநர் ஒருவரை சந்தித்து விளக்கம் கேட்டோம். அவரோ, ""பொதுவாகவே எந்த ஓரிடத்திலும் நீண்ட காலத்திற்கு தண்ணீரை தேக்கி வைத்தால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். அதுவும் ஆவின் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து வெளி யேறும்போது நேரடியாக புவியின் மேற்பரப்பில் உள்ள நீரையும், போர்வெல் நீரையும் கண்டிப்பாக அது மாசுபடுத்தும். பூமிக்கடியில் நீரால் சூழப்பட்ட பகுதியை "அக்யூஃபர்' எனக் கூறுவோம். அந்தப் பகுதியில் ஆவின் கழிவுநீர் கலந்துவிட்டால் அதன் பாதிப்பு ஒரு கி.மீ., தூரத்திற்குக் கூட இருக்கும். ஆயிரம் அடி ஆழத்திற்கு அப்பாலும் நீரை மாசுபடுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. சேலம் ஆவினில் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார் அக்கறையோடு. தனது மாவட்டத்திலேயே இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற தீவுகள் இருப்பதை முதல்வர் எடப்பாடி அறிவாரா? அங்கு வசிக்கும் அப்பாவி மக்களை துயரங்களில் இருந்து அவர் மீட்பாரா?

 

Ayodhya




 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.