Skip to main content

"ஆட்சி கலைப்பு பேச்சு" அரசியல் முதிர்ச்சி சிறிதும் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார் - ராம சுப்பரமணியன் பேட்டி!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

jk

 

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. ஒவ்வொரு துறை சார்பான விவாதங்களில் அந்தந்த அமைச்சர்கள் பதிலளிப்பதோடு, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இதில் அரசின் செயல்பாடுகள் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்தும் மூத்த அரசியல் ஆய்வாளர் டாக்டர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்மடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு துறை சார்பாக அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகிறது. தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மொட்டை அடிக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் திருமணம் செய்தால் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 


முதலில் என்னுடைய நன்றிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உயர்திரு சேகர் பாபு அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 112 அறிவிப்புகளை அவர் வழங்கியிருக்கிறார். நீங்கள் வருவதற்கு முன்னரே அதை நான் தயாராக வைத்திருக்கிறேன். நான் ரொம்ப ஆச்சரியப்படுகிறேன். எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனித்து அவர் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் அவருக்குத் தெரியாத கோயில்களே இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பக்கமும் அவர் பார்வையை செலுத்தியுள்ளார். இதெல்லாம் அவர் அமைச்சரான பிறகு ஆய்வு செய்து தெரிந்துகொண்டதா? இல்லை அதற்கு முன்னரே அவருக்குத் தெரியமா? என்று ஆச்சரியப்படுத்துகிறது. இந்த அறிவிப்புகளில் என் மனதுக்குப் படித்த சில விஷயங்களை முதலில் கூறுகிறேன். 

 

முதலில் வடலூர் வள்ளல் பெருமான், நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஞானி; மிகப்பெரிய பொக்கிஷம். 19ஆம் நூற்றாண்டில் இருந்தவர் அவர். அவரைப் பற்றி இப்போது அனைவருக்கும் தெரியவில்லை. குறிப்பிட்ட சில லட்சம் பேருக்கு மட்டுமே தெரிகிறது. அவருடைய கருத்துகள் அருமையானவை. அவர் எழுதிய திருவருட்பா, திருவாசகத்துக்கு இணையாக போற்றப்படும் ஒன்றாக இருக்கிறது. மதமான பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும், அந்த மதம், இந்த மதம் என்று தற்போது கூத்தடிக்கிறார்களே, அதற்குத்தான் அப்போதே அவர் இப்படி கூறியிருக்கிறார். அவருக்கு தற்போது சிறப்பு செய்திருக்கிறார்கள். மலைக்கோட்டை, திருக்கழுகுன்றம் முதலிய இடங்களில் ரோப் கார்கள் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார். இது எவ்வளவு பாராட்டப்பட வேண்டிய விஷயம். என்னை மாதிரியான ஆட்கள் அங்கு போக வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முட்டி வலி பிரச்சனை இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்துதான் அவர் இத்தகைய முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவருக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

விபூதி, குங்குமம் கண்டிப்பாக பூசியிருக்க வேண்டும். ஆனால் தற்போது தரமான விபூதி, குங்குமம் கிடைப்பதில்லை. சில விபூதிகளைப் பூசினால் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. அதையும் தாண்டி சிலருக்குப் புண் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. தற்போது அமைச்சர் தரமான விபூதி, குங்குமம் கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். தேர் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நம்முடைய திருவாரூர் தேர் ஓடுகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். தற்போது 18 முக்கிய கோயில்களின் தேர் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். பல கோயில்களில் திருப்பணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றிகளைக் கூற கடமைப்பட்டுள்ளேன். 

 

இந்த ஆட்சி இந்துக்களுக்கு நல்லது செய்கிறது என்று நீங்கள் கூறும் இந்த வேளையில், சென்னையில் இன்று திமுக ஆட்சி இந்து விரோத ஆட்சி என்று கூறி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்

 

இந்து முன்னணியை திரு. ராமகோபாலன் ஆரம்பித்த நாளில் இருந்து அதனை எனக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் அதனுடைய உறுப்பினர் என்று கூட என்னை நீங்கள் சொல்லலாம். எத்தனையோ முறை அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆக, விநாயகர் விழா என்பது ஒரு எழுச்சி விழாதான், கொண்டாட வேண்டிய ஒன்றுதான். ஆனால், தமிழக அரசு கரோனா காரணமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட பிறகுதான் கரோனா தொற்று மிக அதிகமானது. இந்தியாவில் பதிவாகும் தினசரி பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு கேரளாவில் பதிவாகிவருகிறது. எனவே மத்திய அரசு, வரக்கூடிய தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகளில் தேவையில்லாமல் மக்கள் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 

 

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர், விநாயகர் திமுகவுக்கு முடிவுரை எழுதுவார், ஆட்சியைக் கலைக்க இது காரணமாக இருக்கப் போகிறது என்று அவர் பேசியதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 


அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறார் என்று தெரியவில்லை. அவரை நான் ஆரம்பத்தில் பாராட்டி பேசியிருக்கிறேன். தற்போது அவர் ஆட்சியைக் கூட கலைப்பேன் என்று சொல்லியிருப்பதாக தெரிகிறது. அவருக்கு அரசியலைப் பற்றி என்ன தெரிந்துள்ளது என தெரியவில்லை. இதற்கெல்லாம் அவர் ஆட்சியைக் கலைப்பாரா? அப்படி செய்ய முடியமா? அரசியல் அனுபவம் சுத்தமாக அவருக்கு இல்லை என்பது இதன் மூலம் உறுதி ஆகிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் அவர் பேசாமல், தேவையில்லாத வார்த்தைகளை, செயல்களை செய்துவருகிறார். ஏட்டிக்குப் போட்டியாக பேசிவருகிறார். இதன் மூலம் அவர் பாஜகவை வளர்க்க முடியாது என்பது மட்டும் உறுதியான ஒன்றாகும். 

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.