Skip to main content

உலகத் தலைவர் பேராசையில் மோடி; விழித்துக் கொண்ட வெளிநாடுகள் - வழக்கறிஞர் பாலு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 Advocate V Balu interview

 

இந்தியா - கனடா அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வே. பாலு  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ஏற்பட்டுள்ள மோதலை 'ஓரங்க நாடகம்' என்று தான் பார்க்கிறேன். அதனால், இதனை விடுத்து உலகளவில் வரும் காலங்களில் இந்தியர்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் வரும் என்பதை பார்ப்போம். பாஜக ஆட்சியமைந்த பின்னால் தன்னை உலக குரு என மோடி நினைத்துக் கொள்கிறார். அதிலும், சுழற்சி முறையில் அனைத்து நாடுகளுக்கும் வரும் ஜி20 தலைமையை ஏற்று பெருமைப்பட்டுக் கொண்டார். தொடர்ந்து, நான் இந்தியாவின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறேன் என்று கூட பேசியுள்ளார். 

 

இந்தியாவில் சனாதனம் பேசப்படுகிறது. ஆனால், இதன் முதல் கோட்பாடே, கடல் கடந்து பயணிக்கக் கூடாது என்பது தான். இதனை உலகம் முழுவதும் பரப்பவும் இவர்கள் முயல்கின்றனர். மேலும், இன்று சரளமாக ஆங்கிலம் பேசித் திரியும் சிலர். இந்தியாவில் பலருக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் கல்வி கற்று அப்பொழுது முதலே வெளிநாடுகளுக்கு பயணப்படத் தொடங்கியவர்கள். அங்கு வெவ்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்து ஒரு கட்டத்தில், அந்த நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு இந்தியாவின் சில சமூகங்கள் பலம் பெற்றுள்ளது. 

 

இலங்கைப் போருக்கு பிறகு அங்கு வசித்த தமிழர்களும் வெவ்வேறு உலக நாடுகளுக்கு சென்று வசிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல், பஞ்சாப்பின் சீக்கியர்கள் தங்கள் வீட்டில் ஒருவரையாவது இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிப்பர். பின்னர், கனடா சென்று வாழவேண்டும் என்பதும் அவர்களின் கனவு. நிலப்பரப்பில் அமெரிக்காவை விட கனடா உயர்ந்தும், மக்கள் தொகையில் குறைந்தும் உள்ளது. குறிப்பாக, கனடாவின் 3 கோடி மக்கள் தொகையில் சுமார் 7 லட்சம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர்.  ஏன், கனடா பாராளுமன்றத்தில் 338 உறுப்பினர்களில் 19 இந்திய வம்சாவளிகளும் அதில் 3 பேர் அமைச்சராகவும் உள்ளனர். கடின உழைப்பாளிகளான சீக்கியர்கள் பிழைப்பு தேடி உலகின் பல நாடுகளுக்கு சென்றனர். இன்று, கனடாவில் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். 

 

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சீக்கியர்கள் கனடா காவல்துறையிலும் சேரத் தொடங்கி, தங்கள் அணியும் தலைப்பாகையை அணிவதற்கு என தனிச் சட்டத்தையும் போராடி பெற்றவர்கள். கனடாவில் குருத்வாராக்களும் நிறைய அமைக்கப்பட்டது. பின் பிந்த்ரே வாலே கொலை செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் காலிஸ்தான் பிரச்சனை கிளம்பியது. ஆனாலும், இன்றைக்கு கனடா பிரதமராக இருக்கும் திரிதாய்யின் அப்பா தான் பிரதமர். அன்றைக்கு அவ்வளவு பெரிய பிரச்சனையாக அது வெடிக்கவில்லை. எனவே, தற்போது ஏன் திடீரென காலிஸ்தான் விவகாரம் கனடாவில் பெரிதாகியுள்ளது என பார்க்க வேண்டும். மோடிக்கு எப்படி இந்தியாவில் ஹிந்துக்களின் வாக்கோ, ட்ரம்ப்புக்கு இந்தியர்களின் வாக்கு, கனடாவில் சீக்கியர்களின் வாக்கு, ரிஷி சுனக்கிற்கு (பிரிட்டன் பிரதமர்) பகவத் மீது ஈர்ப்பு என இப்படியாக தகவல்கள் வந்தது. தற்போது நடந்து வரும் விவகாரத்தில் காலிஸ்தான்களுக்கு கனடா புகலிடம் அளிப்பதாக சொல்கின்றனர். 

 

1970களில் முனிச் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் சில இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக பின்னர், இஸ்ரேல் தனிப் படை அமைத்து அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கொன்று பழிவாங்கியது. இதுபோல மோடி அவர்கள் உலக நாடுகளில் காலிஸ்தான்களை வேட்டையாடுகிறார் என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சமீபமாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு பிரபலப்படுத்தினார். இதன் விளைவு, மோடி பஞ்சாப் சென்றபோது பாலத்தில் காக்க வைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அம்ரித்பால் சிங்க் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்தியா, மீண்டும் காலிஸ்தான்கள் கூட்டு அமைக்கிறார்கள் எனக் கூறி பிரச்சனையை கிளறிவிட்டது. ஆனால், இந்திய அரசால் நேரடியாக சீக்கியர்களை அவ்வளவு எளிதில் சீண்டிவிட முடியாது. 

 

மேலும், இங்குள்ள இந்தியர்கள் வெளிநாடுகளில் சென்று குடியேறிவிட்டு ஹிந்துத்துவாவை தூக்கிப் பிடிக்கிறார்கள். இது கனடாவில் உள்ள சீக்கியர்களை தொந்தரவு செய்துள்ளது. தொடர்ந்து, பாஜக ஆட்சியமைத்த பிறகு உலக நாடுகளில் பல பாராளுமன்றத்தில் தனது ஹிந்துத்துவ போர்வையை போர்த்த முயற்சிக்கிறது. சமீபத்தில், கூட தேஜஸ்வி சூர்யா (பாஜக) என்பவர் அரபு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் குறித்து பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர், இந்திய அரசு மன்னிப்பு கேட்டவுடன் தான் பிரச்சனை தீர்ந்தது. ஆனாலும், தொடர்ந்து இன்றைக்கு உலக நாடுகளில் சனாதனவாதிகளின் கதறல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இவர்கள் அங்கு ஆதிக்கம் செலுத்துவதால், இந்தியாவில் இருந்து சென்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஜாதிய ரீதியாக கொடுமைக்கு ஆளாகின்றனர். 

 

தொடர்ந்து, பல உலக நாடுகளில் வெளியில் இருந்து வந்து குடியேறிய மக்கள் சிறிது சிறிதாக, ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்கின்றனர். எனவே தான் கனடாவில் சீக்கியர்களின் பிரச்சனையை பிரதமர் வரை இறங்கி வந்து பேச வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, கனடாவில் குஜ்ஜார் என்ற காலிஸ்தான் தீவிரவாதி இருக்கிறார் அவரை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கேட்காமல், திடீரென அவர் சுடப்பட்டது தான் பெரிய சர்ச்சையானது. எனவே, உலக நாடுகளில் இந்தியர்கள் சென்று அங்கு கோவில் கட்டுவது, ஹிந்துத்துவத்தை பரப்புவது என ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்த செயல் பல ஆண்டுகள் கழித்து உங்க மதத்தை இந்தியாவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விரட்டிவிடும் அளவிற்கு மாறவும் வாய்ப்புள்ளது. இந்தியர்கள் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதோ, அரசியலில் பங்கு கொள்வதோ சிக்கல் இல்லை. மாறாக, ஹிந்துத்துவம் என்ற கருத்தியலை அங்கு விதைக்க முயல்வது சிக்கலாகி, ஏற்கனவே வசித்து வரும் இந்தியர்களை சந்தேகிக்க வைக்கிறது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தால் பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு எதிராக திரும்பவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சிறிய அமைப்பை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் எதிரியாக மாற்ற தவறாக வேலை செய்கிறார்கள். அதனால் இங்கு அய்யனார் போன்ற குலதெய்வ வழிபாட்டில் இருப்பவரையும் சேர்த்து அவமானப் படுத்துகிறார்கள். இவர்களும் வெளிநாடு சென்று நாமளும் ஹிந்து என நினைத்து அந்தக் கும்பலின் பின் செல்கின்றனர்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 


 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.