18 எம்.எல்.ஏ. தீர்ப்பு! மீண்டும் கூவத்தூர்!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்...பதட்டமான எடப்பாடி...மீண்டும் கூவத்தூர்?
முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிருக்கும் நேரத்தில் ஆளுங்கட்சி எம்.எல். ஏ.க்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் தமிழக அரசியலில் நடைபெற போகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவியது. பின்பு இது பற்றி விசாரித்த போது, அதிமுகவை சேர்ந்த 8 அமைச்சர்களும், 15 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடிக்கு எதிராக மகாபலிபுரத்தில் ரகசியமாக எல்லாரும் சேர்ந்து செயல்பட போகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் பரவியது, ஆளும்கட்சித் தரப்பை பதட்டமாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் நடந்த உண்மை நிலவரம் வேறு என்கிறாரக்ள் நெருங்கிய வட்டாரங்கள்.
அதாவது, பல்லவர் காலக் கலைச் சிற்பங்களைப் பார்வையிட சீன அதிபர் ஜின்பிங், இங்க இருக்கும் மாமல்லபுரத்துக்கு அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் வர இருப்பதாக தகவல் வெளியாகின. அப்போது அவரும் பிரதமர் மோடியும் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இரு நாட்டு உறவுகளும் வலுப்பட சில ஒப்பந்தங்களிலும் கையெழுத்துப் போட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால் தமிழக அரசின் குழு ஒன்று, இப்போது இருந்து மாமல்லபுரம் சென்று, சீன அதிபர் தங்கவதற்கு இடத்தையும் அவர் பார்வையிடப் போகும் பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த சிலர், மந்திரிகள் ரகசியமாக சந்திப்பு என்று சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பி விட்டுள்ளனர்.
Next Story
தங்க தமிழ்செல்வனை தொடர்ந்து தினகரனுக்கு அடுத்த ஷாக்!
தினகரன், தங்க தமிழ்செல்வன் மோதல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்க தமிழ்செல்வன் வெகு விரைவில் அமமுக கட்சியை விட்டு வெளியேறி அதிமுகவில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க அமைச்சர் தங்கமணி மூலம் எடப்பாடி காய் நகர்த்தியதாக தெரிவிக்கின்றனர். தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகுவது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பழனியப்பன் அதிமுகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சியை அமைச்சர் வேலுமணியை வைத்து எடப்பாடி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருவதால் அமமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திமுக அல்லது அதிமுகவில் இணைவார்கள் என்று தெரிகிறது. இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் தினகரன் ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர்.