கூத்து!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
மேஸ்திரி வேலை பார்த்து வாக்கு சேகரித்த கடம்பூர் ராஜு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நாள் அமைச்சர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிமுக, திமுக என சமரசம் இல்லாமல் இரு தரப்பினரும் பரோட்டா போடுவது, டீ போடுவது, துணிகளைத் துவைப்பது என நூதன முறைகளைப் பின்பற்றி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு ஆலமரத்துமேடு பகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அந்தப் பகுதியில் கட்டிட பணி நடைபெறும் இடத்திற்குச் சென்ற கடம்பூர் ராஜு கட்டிடத்திற்கு கற்களை எடுத்து வைத்து சிமெண்ட் பூசி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
Next Story
''கம்யூனிஸ்டுகள் மவுனம் சாதிப்பது ஏன்?''-கடம்பூர் ராஜு பேட்டி
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் நடந்த பரப்புரைக்கு பின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சொன்ன வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. இதை கூட்டணிக் கட்சிகளாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதை கண்டித்து அறிக்கை விடவில்லை. அவர்களை கண்டித்து கேட்பதற்கு திராணியில்லாமல் மவுனம் காப்பது ஏன்? உண்மையிலேயே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் இன்றைக்கு கூட்டணிக் கட்சிகள் இருக்கிறார்கள்''என்றார்.