Skip to main content

பட அதிபர்கள் ஸ்ட்ரைக் - தடையை மீறிய விஜய்62 ?

Published on 20/03/2018 | Edited on 21/03/2018
vijay shooting spot

விஜய் 62 ஷூட்டிங் நடப்பதாக சொல்லப்படும் இடம் 

 

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இதனால் தற்போது படப்பிடிப்பில் இருந்த முன்னணி நடிகர்களின் படங்களோடு சேர்த்து 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரை உலகை நம்பி வேலை செய்த 5 லட்சம் சினிமா தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடைகளை மீறி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

 

பிரத்யேக அனுமதியுடன் விஜய் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி  படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இந்த செய்தி தமிழ் திரையுலகில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் திரையுலகில் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தனது டுவிட்டர் பக்கத்தில்..."இன்னிக்கு விஜய் படம் விக்டோரியா ஹால்ல சூட்டிங் நடக்கிறதா ஒரு நியூஸ் ...விசாரிச்சா ஏதொ special permission வாங்கி நடக்குதாம்(authentic news!) அப்போ.....?......?...?" என்று பதிவிட்டு தன் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் தயரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ்... "விஜய் பட படப்பிடிப்பு சென்னை விக்டோரியா ஹாலில் நடக்கிறது. எங்கே நமது ஒற்றுமை..? எப்படி நம் சங்கம் இதற்கு மட்டும் பிரத்யேக அனுமதி கொடுக்கலாம்..? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தன் எதிர்ப்பை டுவிட்டர் வாயிலாக பதிவிட்டிருந்தார். மேலும், இன்னும் பல சினிமா பிரபலங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையில் தற்போது இந்த விவகாரத்திற்கு விளக்கமளித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதன் படி கடைசியாக நடந்த தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டத்தில், முடியும் தருவாயில் இருக்கும் படப்பிடிப்புகளுக்கு மட்டும் ஓரிரு நாட்கள் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் விஜய்62 படக்குழு, நாடோடிகள்2 படக்குழு மற்றும் மேலும் இரண்டு சிறிய படங்களின் படக்குழு ஆகியோரிடமிருந்து சிறப்பு அனுமதி கேட்டு கடிதங்கள் வந்தன. இதையடுத்து அதை பரிசீலனை செய்த பின்னர் தயாரிப்பாளர் நலன் கருதி குறுகிய கால படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி அளித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் தயரிப்பாளர்கள் யாரும் இதை பற்றி எந்த அவதூறு செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் உண்மையில் லாபமா...? நஷ்டமா...? - பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல் 

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
vijay

 

 

 

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்  சென்னையில் போட்ட பணத்தை எடுத்துவிட்டோம் என ஒரு வாரத்திற்கு முன்பு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சர்கார் வசூல் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பட லாபம், நஷ்டம் குறித்து பேசியபோது... "படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கண்டிப்பாக போட்ட பணம் வந்திருக்கும். மேலும் சிலருக்கு லாபமும் கிடைத்திருக்கும். ஒரு எழுபதிலுருந்து என்பது சதவீதம் வரை  தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கும். சொல்லப்போனால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லை" என்றார்.

 

 

Next Story

கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கிய சர்கார் ! விஜய் மீது புதிய வழக்கு 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
vijay

 

 

 

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விஜய்யின் பேனர்களை  கிழித்தனர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து திரையரங்குகளில் மறு வெளியீடு செய்தது படக்குழு. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் 'சர்கார்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே கேரளாவிலுள்ள கொல்லத்தில் 'சர்கார்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு 175 அடியில் பேனர் வைத்து பின்னர் அதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து அந்த பேனர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.