நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை அடுத்து இரண்டு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படமும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்புக்கு முன்பே தொலைக்காட்சி கைப்பற்றிய சிவகார்த்திகேயன் படம்
சார்ந்த செய்திகள்
Next Story
‘வேற லெவல் சகோ’ - பிறந்தநாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்!
'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பணப்பிரச்சனை காரணமாக, பாதியில் முடங்கிய இப்படத்தின் பணிகள், கரோனா நெருக்கடிநிலை காரணமாக நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்தது. பின் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்கிய படக்குழு, படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டாலும், இந்த ஆண்டு இறுதியில்தான், 'அயலான்' திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை (17 பிப்.) முன்னிட்டு ‘அயலான்’ படத்தின் 'வேற லெவல் சகோ..' என்ற சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story
"என்னை ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி!" - சிவகார்த்திகேயன் ட்வீட்!
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் 'அயலான்' படத்தை 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே ஆரம்பித்து பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இதன் படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாயகி ரகுல் ப்ரீத் சிங் 'அயலான்' படத்தில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "அயலான் திரைப்படத்தின் கிட்டத்தட்ட கடைசிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். எனக்கு கடைசி 3 நாட்கள் மட்டுமே உள்ளது. என்ன ஒரு உணர்ச்சிமிக்க இயக்குனர் ரவிக்குமார். இனிமையாகப் பழகக்கூடியவர் சிவகார்த்திகேயன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் ட்வீட் செய்த சிவகார்த்திகேயன், "உங்களுடன் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி ரகுல் பிரீத். என்னை எப்போதும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி ராஜா பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.