Skip to main content

புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் 

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
sivakarthikeyan

 

 

 

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளை புலியை தத்தெடுத்து உள்ளார். மேலும் இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... "இந்தியாவில் 1952ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா மக்களுக்கு வன உயரினங்களை பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இந்த ஆண்டின் முக்கிய குறிக்கோள் பூனைகளை காப்போம் என்பதாகும். வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புலி மற்றும் சிங்கத்தின் உணவுக்காக நாளொன்றுக்கு ரூ.1196.68 செலவாகும், இதே போன்று இதர விலங்குகளுக்கு அதன் உணவிற்கேற்ப நாளொன்றிற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அனு' என்ற பெண் வெள்ளைப் புலியை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார், அதற்கான ஆவணத்தை அவர் பூங்கா இயக்குனர் எஸ்.யுவராஜிடம் வழங்கினார்" என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்