இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கடந்த ஆண்டு வெளியாகி படு தோல்வி அடைந்தது. இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி இல்லாததுக்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக அறிவித்தனர். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் சிம்பு மேல் நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக பெரிதாக பேசப்படாத இருந்த இந்த பிரச்னை தற்போது மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ளது. தயாரிப்பாளரும், இயக்குனரும் பத்திரிகையாளர்களிடம் பேசியது தொடர்பாக சிம்பு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில்...."சிம்பு ஆதிக்கிடம், கூட இருந்த நீயே இப்படி செய்யாலாமா... என்னுடன் இரண்டு வருடம் பயணித்த நீயே என்னைப் பற்றி தெரியாமல் பேசி இருக்கிற. என்னைப் பற்றி பேசியதால் உனக்கு ஏதாவது புரோஜனமாக நடந்ததா? இதன் மூலம் உனக்கு பட வாய்ப்பு கிடைத்தால் கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். என்றார். அதற்கு ஆதிக்..."அண்ணா நா எதுவுமே உங்கள பத்தி பேசல, நீங்க என் மேல் ரொம்ப கோபமா இருக்கீங்க அதனால என்ன போட போறீங்கன்னு சொன்னாங்க. அதான் நான் அப்படி நடந்துக்கிட்டேன்" என்றார். இப்படி இவர்கள் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது சிம்பு மேல் தவறு இல்லை என்பது போல் தெரிகிறது. இன்னொரு பக்கம் ஆதிக் ஏதோ பட வாய்ப்பிற்காக தான் இவ்வாறு சிம்புவிற்கு எதிராக பேசியுள்ளாரோ என்றும் தோன்றுகிறது என்று ரசிகர்களிடையே இதுகுறித்த கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அஅஅ பட விவகாரம், இயக்குனரை வெளுத்து வாங்கிய சிம்பு!
சார்ந்த செய்திகள்
Next Story
சிம்புவுடன் மல்லுக்கட்டிய இயக்குநர் படத்தில் 5 நாயகிகளா..?
தேவி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டு வந்துகொண்டிருக்கும் நடிகர் பிரபுதேவா.அவரது நடிப்பில் அடுத்ததாகப் "பொன் மாணிக்கவேல், யங் மங் சங்", ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன. இதில் பொன் மாணிக்கவேல் படம் பிரபுதேவாவின் 50வது படமாகும்.
மேலும் இவர் தேள், பஹீரா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகும் பஹீரா படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் மொத்தம் 5 நாயகிகள் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்த காயத்ரியும், 'அனேகன்' படத்தில் நடித்த அமைராவும் வரும் காட்சிகளைப் படமாக்கிவிட்டனர். மேலும் ரம்யா நம்பீசன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோரின் காட்சிகள் படமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு கதாநாயகி யார் என்று முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவா மற்றும் இலங்கையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
Next Story
'அண்டாவுல தான் ஊத்த சொன்னேன்...என் மேல இல்லை' - சிம்பு திடீர் பல்டி !
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வரும் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு 'கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் 'இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு எனக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள்' என ரசிகர்களுக்கு கட்டளையிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சிம்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்...
"கடந்த ஒரு வருடத்திற்கு முன் என்னுடைய ரசிகர் ஒருவர் கட்அவுட் இறந்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணாமாக நான் என் படத்திற்கு கட்அவுட், பேனர் எல்லாம் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள் என எனக்கெதிராக விமர்சனங்கள் வந்தது. அதனால் நான் கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என கிண்டலாக சொன்னேன். நான் இப்படி சொன்னது யார் மனதையாவது புண் படும்படியாக இருந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேனே தவிர எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என நினைக்கலாம். நான் மாற்றி பேசவில்லை அனைவரும் மாற வேண்டும் என்று தான் பேசுகிறேன்" என்றார்.