Skip to main content

“அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்” -  ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
raghava lawrence request to give  chance to handihapped childrens

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.  மேலும் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்ததாக வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் படத்தில் நடிக்கவுள்ளார். 

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே நிறைய மக்களுக்கு நிதி, கல்வி எனப் பல்வேறு உதவிகளை லாரன்ஸ் வழங்கி வருகிறார். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ராகவா லாரன்ஸின்  ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில்,  ‘மல்லர் கம்பம்’ சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், “என்னுடைய படங்களில் அதிகபட்சம் மாற்றுத் திறனாளி பசங்களை ஆடவைக்க முயற்சி செய்வேன். அவுங்களுக்கு நடனத்தை விட்டால் வேறு எதுவும் தெரியாது. வாழ்வாதாரமே நடனத்தில் தான் அடங்கியிருக்கு. ஆனால் கை கால்கள் இல்லை என்றாலும் கூட அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கே சில சமயங்களில் மன அழுத்தத்தில் இருக்கும் போது பசங்கள கூப்பிட்டு 5 நிமிஷம் ஆடசொல்லி பார்ப்பேன். இவுங்களே இவ்ளோ சாதிக்குறாங்க. இதுக்கெல்லாம் அப்செட் ஆனா எப்பிடி-னு ரீசார்ச் பண்ணிப்பேன்.

சமீப காலமாக பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்காம இருந்தாங்க. நான் நடிக்கிற எல்லா படத்திலும் மாற்றுத் திறனாளி பசங்களை பயன்படுத்தலாம் எனச் சொல்லி தயாரிப்பாளரிடம் கேட்பேன். எல்லா இடத்திலும் அவுங்களையே ஆட வைச்சா ரிப்பீட் ஆகிற மாதிரி இருக்கு மாஸ்டர்னு சொல்வாங்க. எத்தனையோ தடவை நயன்தாரா, த்ரிஷா ஆடியதையெல்லாம் பார்க்கிறோம்ல சார், இந்தப் பசங்களையும் பார்ப்போம் எனச் சொல்வேன். இதற்கு ஒரு சிலர் ஒத்துப்பாங்க, ஒரு சிலர் வேண்டாம்னு சொல்லிவிடுவாங்க. வாழ்க்கையில் தன்னம்பிக்கை இல்லாமல் எவ்ளோ விஷயங்கள் நடக்குது. அது தற்கொலை வரை போகிறது. ஆனால் இந்தப் பசங்களைப் பார்த்து தற்கொலை செய்யும் எண்ணம் வரவங்க கத்துக்க வேண்டும்” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள் - பிஸியாகும் ராகவா லாரன்ஸ்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டே நிறைய ஏழை எளிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனிடையே விஜய் கட்டிய கோயிலுக்கு விஜய்யின் தாயார் ஷோபாவுடன் அண்மையில் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.  

raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முதலில் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் வெளியிடவும் செய்கிறார். 

இப்படத்திற்குப் பின் அடுத்த படமாக, சத்ய ஜோதி மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் ஹண்டர் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையாக இப்படம் வெளியாகவுள்ளது. 

Next Story

“விஜய் கட்டிய கோயிலுக்கு எல்லோரும் செல்ல வேண்டும்” - காரணம் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
raghava lawrence visit vijay sai baba temple with vijay mother shoba

விஜய்யின் அரசியல் கட்சியான த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் சாய் பாபா கோயிலில் இருக்கும் புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் கடந்த 8ஆம் தேதி பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் பல்வேறு கேள்விகளையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. பின்பு புஸ்ஸி ஆனந்த் திடீரென்று அப்புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்திலிருந்து நீக்கினார். இது சர்ச்சையைக் கிளப்ப அப்புகைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தது. கொரட்டூரில் விஜய்க்கு சொந்தமான 8 கிரவுண்ட் நிலத்தில் அவருடைய தாயார் ஷோபாவிற்காக 'சாய்பாபா மந்திர்' என்று ஒரு கோயில் கட்டி உள்ளதாகவும், விஜய்க்கு சொந்தமாக சாலிகிராமத்தில் இருக்கும் ஷோபா திருமண மண்டபம் உள்ள இடத்தில் முதலில் கோவில் கட்ட ஏற்பாடு செய்து, அங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அந்த முடிவு மாற்றப்பட்டு கொரட்டூரில் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே சாய்பாபா கோவில் ஒன்றுக்கு நடிகர் விஜயின் தாய் ஷோபனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியிருந்தது. இதையடுத்து இந்த கோயில் சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் சோபா செய்தியாளர்களிடம் பேசினார்.  சாய்பாபா கோவில் தரிசனம் மேற்கொண்ட ஷோபா, ரொம்ப நாளாக விஜய்யின் சொந்த இடத்தில் ஒரு சாய்பாபா கோயில் கட்ட ஆசையாக இருப்பதாக விஜய்யிடம் சொல்லிவந்ததாகவும், அதன்படி அவர் கட்டிக்கொடுத்துவிட்டதால் வியாழன் தோறும் அந்த கோயிலுக்கு வந்து தரிசனம் மேற்கொண்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். 

இந்த நிலையில் விஜய் கட்டியுள்ள சாய் பாபா கோயிலில் ராகவா லாரன்ஸ் விஜய்யின் தாயார் ஷோபாவுடன் சென்று தரிசனம் செய்தார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது, “இன்று நண்பன் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயார் ஷோபாவுடன் சென்றேன். நான் என் ராகவேந்திரர் ஸ்வாமி கோவிலைக் கட்டியபோது, எங்கள் கோவிலில் ஒரு பாடலைப் பாடி, எங்களுக்கு ஆசீர்வதித்தார். இன்று அவருடன் அவர்களின் கோவிலுக்கு சென்றதில் மகிழ்ச்சியடைகிறேன். நண்பன் விஜய்க்கு இந்தக் கோவிலைக் கட்டியதற்காக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நான் இங்கு தெய்வீகத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை உணர்ந்தேன். அதனால் எல்லோரும் இந்த கோவிலுக்கு வந்து அருள் பெற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். 

Hi everyone, I visited Nanban Vijay’s Sai Baba Temple today along with his mother. When I built My Raghavendra Swamy temple, She sang a song in our temple and graced us with her presence. Today, I’m happy to visit their temple with her. My heartfelt wishes to Nanban Vijay… pic.twitter.com/sZvzFqC0LL

 

— Raghava Lawrence (@offl_Lawrence) April 13, 2024