கோவை கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.லட்சுமணன் மரணம்
கோவை கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., வி.கே.லட்சுமணன் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்தார். இந்த நிலையில் 25.08.2012 அன்று காலை கோவையை அடுத்த வடமதுரை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் வி.கே.லட்சுமணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
வி.கே.லட்சுமணன் கோவை கிழக்கு தொகுதியில் 1991-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராகவும் இருந்துள்ளார். துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் 23 ஆண்டுகள் துணை தலைவராக பணியாற்றினார். கோவை வடக்கு தாலுகா வீட்டு வசதி சங்க தலைவராகவும் பதவி வகித்தார். இவருக்கு டாக்டர் சந்திரசேகர், டாக்டர் அரவிந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மரணம் அடைந்த வி.கே.லட்சுமணன் உடல் தகனம் ஞாயிற்றுக்கிழமை காலை பெரியநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் நடைபெற்றது.