அனைவருக்கும் சமாதானம், வளம் சேரட்டும்: பிரதமர் மன்மோகன்சிங் ரம்ஜான் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "ஈத் பெருநாள், மகிழ்ச்சிக்குரிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை சகோதரத்துவ உணர்வையும், தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டு ஈத் பண்டிகை நமது கலாச்சார பிணைப்பினை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் சமாதானத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்'' என கூறியுள்ளார்.