சுஷில்குமாரின் பரிசுத்தொகை அதிகரிப்பு
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற டெல்லியை சேர்ந்த சுஷில்குமாருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று டெல்லி மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சிறப்புக்குரிய அவருக்கு இந்த பரிசுத்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க டெல்லியில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவர் ரூ.2 கோடி பரிசாக பெறுகிறார்.