டெசோ மாநாட்டை அறிவாலயத்தில் நடத்த முடிவு? டெசோ மாநாட்டுக்கு சென்னை போலீஸ் அனுமதி மறுத்ததை தொடர்ந்து தி.மு.க. தலைவர் கலைஞர் தனது கோபாலாபுரம் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். போலீஸ் தடையை எதிர்த்து ஐகோர்ட்டு சிறப்பு பெஞ்ச்சில் இன்று (11.08.2012) அப்பீல் செய்யப்படுகிறது. மாநாட்டுக்கு தடை விதித்து போலீஸ் கூறிய 11 காரணங்களுக்கும் அப்பீல் மனுவில் பதில் அளிக்கப்படுகிறது. ஐகோர்ட்டில் அனுமதி கிடைக்காவிட்டால் அண்ணா அறிவாலயத்திஹ்ல் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாநாட்டை நடத்தி முடிக்கவும் தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.