சிலை உடைப்பு: இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம் மதுரை சிலை உடைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சாத்தூரில் இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு என்ற இடத்தில் அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது சிலைகள் இன்று காலை உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில், சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இரவு நேர பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அரசு பஸ்களும், சில தனியார் பஸ்களும் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதேபோல் மதுரை அருகே உள்ள பல இடங்களிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.