பதக்கம் வென்றும் பதவி உயர்வு தரவில்லை! விஜயகுமார் ஆதங்கம்!
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் விஜயகுமாருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாததால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜயகுமார் (வயது 25) கலந்து கொண்டார். இந்திய ராணுவத்தில் சுபேதாராக உள்ள இவர், ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். கடந்த 6 ஆண்டுகளாக இந்திய ராணுவ தரப்பில் எந்த பதவி உயர்வும் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ள விஜயகுமார், ராணுவத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.