நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு: போலீசார் தடியடி நடத்தினர்
தும்கூர் அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க நடிகர் தர்ஷன் வந்தார். அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.
தும்கூர் மாவட்டம் டவுனில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் நேற்று இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கன்னடத்தின் பிரபல நடிகர் தர்ஷன் நேற்று மாலையில் தொடங்கி வைப்பதாக இருந்தது.
அதனால் நடிகர் தர்ஷனை பார்க்கவும், போட்டியை காணவும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள், வாலிபர்கள் மற்றும் தர்ஷனின் ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டு வந்திருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் நடிகர் தர்ஷன் அரசு கல்லூரி மைதானத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைத் தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.
இதற்கிடையே கிரிக்கெட் போட்டியை தர்ஷன் தொட ங்கி வைத்தார். அப்போது மைதானத்தில் குவிந் திருந்த ரசிகர்கள், பொதுமக்கள் தர்ஷனை பார்க்கும் ஆர்வத்தில் முண்டி அடித்தார்கள். இதனால் ரசிகர் களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தையடுத்து, கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லாட்டியை சுழற்றினார்கள். அதன்பிறகு தள்ளுமுள்ளு, நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து தர்ஷனை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் தும்கூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.