சமாஜ்வாடி கட்சியின் குறிக்கோள்: முலாயம்சிங்
சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும் என அக்கட்சியினருக்கு, முலாயம்சிங் யாதவ் அறிவுரை கூறியுள்ளார்.
அவர் மேலும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கட்சியினர் முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் இதுபற்றி பேசிய முலாயம்சிங், 2014-ம் ஆண்டைய மக்களவை தேர்தலுக்கு தயாராகுமாறும் தனது கட்சியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைத்ததற்கு அடுத்த படியாக, மக்களவை தேர்தலில் அதிக இடங் களைக் கைப்பற்றுவதுதான் சமாஜ்வாடி கட்சியின் குறிக்கோள் எனவும் முலாயம் கூறியுள்ளார்.