கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள காம்பட் நகரை சேர்ந்தவர் மும்தாஷ் மிர்பாகர். வர்த்தகர். இவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார். இதை அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் மிர்பாகரையும், அவருடன் இருந்த பெண்ணையும் கைது செய்தனர். இவர்கள் இருவரின் உடைகளையும் களைந்து நிர்வாணமாக்கினர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக அழை த்து சென்றனர்.
இச்சம்பவம் பட்டப்பகலில் நடந்தது. எனவே இதை பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் போட் டோ எடுத்தனர். அதை தங்களது நண்பர்களின் செல் போன்களுக்கும் அனுப்பினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மும்தாஷ் மிர்பாகர் பல பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து நடத்தி வந்தார். அப்போது அவர்களுடன் நடனம் ஆடி கும்மாளம் போடுவார். இது அண்டை வீட்டாருக்கு இடையூறாக இருந்தது.
தற்போது ரம்ஜான் நோன்பின்போது இதுபோன்ற அடாவடி செயலில் அவர் ஈடுபட்டதால் பலர் இவர் மீது போலீசில் புகார் செய்தனர். எனவே, அவர் கைது செய்யப்பட்டு இதுபோன்ற தண்டனை வழங்கியதாக தெரிவித்தனர்.
இருந்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் சஸ்பெண்டு (தற்காலிகபணி நீக்கம்) செய்யப் பட்டனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மும்தாஷ் மிர்பாகர் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார். ஆனால் அவரது கள்ளக்காதலி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.