கிரானைட் நிறுவனம் மீதான வழக்கு விவரம் : கலெக்டர் அறிவிப்பு
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் அனுமதி வழங்கப்பட்ட 174 கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் வருவாய்த்துறை, நில அளவைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அப்போது மேலூர் தாலுகா கீழைïர் கிராமத்தில் அனுமதி பெற்ற பகுதிகளுடன் சேர்த்து குளம் உள்பட சில பகுதிகளில் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் அத்துமீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அந்த தடயங்களை மறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அத்துமீறி பிரவேசித்தல், தடயங்களை அழித்தல், கனிம சட்டம், தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதங்கள் தடுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கீழைïர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்’’ என்று கூறப்பட்டு உள்ளது.