ஒலிம்பிக்: இந்திய வீரர் விகாஸ் காலிறுதிக்கு தகுதி
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் அமெரிக்க வீரரை வீழ்த்தி கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவுக்கான குத்துச்சண்டைப் போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் விகாஸ் கிரிஷன், அமெரிக்க வீரர் ஸ்பென்ஸ் எர்ல்லை எதிர்த்து விளையாடினார். முதல் சுற்றில் 4-2 என்ற புள்ளிகள் கணக்கில் விகாஸ் முன் னிலை பெற்றார்.
இரண்டாவது சுற்றில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எர்ஸ், அந்த சுற்றில் 6 புள்ளிகளைப் பெற்றார். விகாஸ் 2-வது சுற்றில் 5 புள்ளிகளைப் பெற்றார். எனினும் 9-8 என்ற சிறிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார் விகாஸ். கடைசி சுற்றில், அமெரிக்க வீரர் அதிக புள்ளிகளைப் பெற முயன்றபோதும், அதனை முறியடித்தார் விகாஸ். அந்த சுற்றில் எர்ல் 3 புள்ளிகளையும், விகாஸ் 4 புள்ளிகளையும் பெற்றனர்.
முடிவில் 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் விகாஸ் வெற்றி பெற்று காலிறுத்திக்கு முன்னேறினார். 7-ம் தேதி நடைபெறும் கால் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை எதிர்த்து களம் காண்கிறார் விகாஸ்.