தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி
தூத்துக்குடிமாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்தவர் மாரியப்பன்,38. கழுகுமலை பேரூராட்சியில் சுகாதார பணியாளராக இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு இவர், மனைவி மாரியம்மாள், மகள் மற்றும் இருமகன்களுடன், வீட்டு மொட்டைமாடியில் படுத்துத் தூங்கினார். நேற்று அதிகாலை சிறுநீர் கழிக்க எழுந்த மாரியப்பன், தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில், பலத்தகாயமடைந்த அவர் அங்கேயே பலியானார். கழுகுமலை போலீசார் விசாரித்தனர்.