கூலி பிரிப்பதில் தகராறு: இளைஞர் அடித்து கொலை
பொன்னேரி அருகே கூலிப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதில் வடமாநில இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேட்டில் சிமெண்ட் கல் அறுக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கூலித் தொகையை பிரித்துக்கொள்வதில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் டிகேஸ்வர் என்பவர் சுத்தியால் அடித்து கொல்லப்பட்டார். டிகேஸ்வரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.