ரூ.15,000 லஞ்சம்: போலீஸ் அதிகாரி கைது
வேலூர் மாவட்டம் கே.அரசன்பட்டு பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் சின்னதுரை. இவர் மீது முறைகேடு புகார் ஒன்று முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவின் பேரின் வேலூர் மாவட்ட எஸ்.பி., பாஸ்கர், சின்னதுரையிடம் விசாரணை நடத்தி உள்ளார். இந்நிலையில் இவ்வழக்கு மற்றும் புகாரில் இருந்து விடுவிக்க சின்னதுரையிடம் ரூ.15,000 லஞ்சம் தருமாறு பாஸ்கர் கேட்டுள்ளார். அதற்கு பாஸ்கர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக சின்னதுரை, நேற்று இரவு வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இன்று காலை பாஸ்கர் வாக்கிங் சென்ற போது சின்னதுரை ரூ.15,000 ஐ லஞ்சமாக அளித்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.