கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கடந்த 2004 ஜூலை 16ல் கும்பகோணத்தில் உள்ள சரஸ்வதி பள்ளியில் தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்தனர். தீ விபத்து வழக்கில் 25 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இருந்து முன்னாள் உதவி தொடக்க கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். பாலகிருஷ்ணனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தீ விபத்தை விசாரிக்கும் தஞ்சாவூர் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.