பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது விபத்து: 2 பேர் பலி
கேரள மாநிலம் காரிமுகல் மாவட்டத்தில் இன்று (03.08.2012) காலை இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்ஸின் டிரைவர் பிரேக் பிடித்த போது பஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.