யானைகளை துரத்தும் வனத்துறையினர்
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் சுற்றிவரும் யானைகள் கூட்டத்தினை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்தும் பணியினை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூரில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் கூட்டம் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுற்றி வந்தது. இவை பலாப்பழங்களையும், பேரிக்காய்களையும், உண்பதற்காக அடிக்கடி நகரப் பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. எனவே இவற்றை, அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்திட வனத்துறையினர் பட்டாசுளை வெடித்தும்,நெருப்பு மூட்டியும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அது பலனளிக்காமல் போகவே, குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான பலாமரங்களில் உள்ள பலாப்பழங்களை வெட்டி எடுத்த கல்லாறு பகுதிகளில் கொட்டிட முடிவு செய்தனர்.