மத்திய அரசே பொறுப்பு: மோடி குற்றச்சாட்டு
புனேயில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பிற்கு மத்திய அரசே பொறுப்பு என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மத்திய அரசு மீது குற்றம்சாட்டி உள்ளார்.
இது போன்ற தாக்குதல்கள் இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளன எனவும் இது போன்ற தாக்குதல்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க நாட்டின் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் புனே குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், இது போன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.