புதிய பார்லிமென்ட் கட்டடம்!ஆகஸ்ட் 9ல் கூடுகிறது பாரம்பரிய குழு!
புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு நியமித்துள்ள பாரம்பரிய குழு வரும் 09.08.2012 அன்று கூடுகிறது.
தற்போதைய பார்லிமென்ட் கட்டடத்தில் கூடவுள்ள இந்த குழு கூட்டத்தில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தேவை மற்றும் அமைப்பு குறித்து விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையிலான இக்குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.