இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் : தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி சபியுல்லா நேற்று பாகிஸ்தான் பஞ்சாப் பிராந்திய போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.
முல்தானில் உள்ள காஜிகாட் மேம்பாலத்துக்கு அருகே தாக்குதல் நடத்துவதற்காகத் தீவிரவாதிகள் பதுங்கியி ருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு வாகன சோதனை நடைபெற்றது. அப்போது பஸ் ஒன்றில் சோதனை நடத்த முயன்ற போது, பஸ்ஸில் இருந்த தீவிரவாதி தப்பிக்க முயன் றான்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டுக் கொல்லப் பட்டான். பின்னர் அவர் தெஹ்ரிக்-இ-தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் கபார் கெய்ஸ்ராம் என்கிற சபியுல்லா என்பதும் இலங்கை அணியினர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்றும் கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த பையில் ஒரு கையெறி குண்டும் இரண்டு துப்பாக்கிகளும் கைப் பற்றப்பட்டன.