நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலவச ஃபோன் எண் வசதி உள்ளது. அந்த ஃபோன் மூலம் இதுவரை 400 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், அதிகபட்சமாக கேபிள் டிவி மாத சந்தாக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது குறித்து புகார் செய்யப்பட்டிருந்தது.
அந்த புகார்களை முறையாக பதிவு செய்து, நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ய, "ஃபேஸ் புக்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இணையதள முகவரியை தொடர்பு கொண்டு, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம். அதற்கு உரிய பதில் உடனடியாக புகார் கொடுத்தவர்களுக்கு அளிக்கப்படும்.
புகார் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், மதுரை, கடலூர் ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் இம்முறையை ஏற்கனவே நடைமுறைபடுத்தியுள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார்.