ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க கல்மாடிக்கு தடை: டில்லி ஐகோர்ட்
லண்டன் ஒலிம்பிக்கில் சுரேஷ் கல்மாடி பங்கேற்க கூடாது என்று டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பொதுநல வழக்கில் இன்று டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் மட்டும் சுரேஷ் கல்மாடி பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜூலை 27ம் தேதிக்கு பின் கல்மாடி பங்கேற்க எந்த தடையும் இல்லை என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் எந்த விளையாட்டுகளிலும் அதிகாரப்பிரிவில் இருக்கக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.