தர்கா கட்டுவதில் பிரச்சினை: சுத்தமல்லியில் 15 பேர் மீது வழக்கு நெல்லை சுத்தமல்லி பஜார் அருகே ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. இதன் அருகில் ஒரு சமாதி உள்ளது. அதில் சமாதியை சுற்றி தர்கா அமைக்க அப்பகுதியில் உள்ளவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அங்கு பந்தல் போட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழ்நிலை உண்டானதால் போலீசார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. >