அரசு ஊழியரிடம் லஞ்சம்:பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரைச் சேர்ந்த கணேசன் கடந்த 1999ல் உடன்குடி பஞ்சில் பணியில் சேர்ந்த இவர் ஆழ்வார் திருநகரிக்கு பணி மாறுதலில் சென்றார். கடந்த நான்கரை வருடங்களாக நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் வரிவசூலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2010 ல் பணிநிரந்தரம் பெற்ற இவர் தனக்கு வரவேண்டிய ஊதிய நிலுவைக் தொகை 2 லட்சத்த 89 ஆயிரத்தைப் பெற 2 ஆண்டுகளாக போராடி வந்தார்.
தற்போது பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள பிரபாவிடம் இதுகுறித்து முறையிட்டார் அவரோ ஊதிய நிலுவைத் கோப்பில் கையெழுத்திட 10 சதம் கமிஷன் வேண்டும் முன்னதாக முன்பணமாக தனக்கும் இளநிலை உதவியாளருக்கும் தலா 5 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டதாக்க்கூறப்படுகிறது.
பணம் கொடுக்க வழியில்லாத கணேசன் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ஜேசுபாதம் அறிவுரையின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் பூசிய 10 ஆயிரத்தை கணேசனிடம் கொடுத்து செயல் அலுவலரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.
அதன்படி செயல் அலுவலர் பிரபாவிடம் அவர் பணத்தைக் கொடுத்தார். அவரோ பணத்தை இளநிலை உதவியாளர் தாமரைச் செல்வத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்படி தாமரைச்செல்வம் பணம் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ராஜி. முத்து ராஜி ஆகியோர் அவரைக் கைது செய்து பணத்தைக் கைப்பற்றினர் இது தொடர்பாக செயல் அலுவலர் பிரபா மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
பொதுமக்களிடம் லஞ்சம் கேப்பது மட்டுமில்லாமல் அரசு ஊழியரிடமே அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றது அரசுப்பணியாளர் வட்டாரத்தில் சூட்டைக்கிளப்பியுள்ளது.