இந்திய கிரிக்கெட் அணியினர் பயிற்சியின்போது அணிய புதிய ஆடை அறிமுகம்
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியினர் சென்னையில் தங்கி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சியின்போது அணிவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எழுமிச்சை நிற ஆடைகள் இன்று (17.07.2012) அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ஆடையைப்போல் தங்களது ஆட்டமும் புத்துயிரோடு இருக்கும் என இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மிகவும் முக்கியம். எனவே பயிற்சியின் போதான ஆடையும் எந்த அளவு முக்கியமானது என்பது எங்களுக்கு நன்கு தெரியும் என இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.