கேஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்
சிவகாசியில் காராச்சேவு தயாரிக்குமிடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த செவற்பட்டியில் கிருஷ்ணசாமி என்பவர் காராச்சேவு உள்ளிட்ட பட்சணங்களை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இன்று பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்தது. இந்த சம்பவத்தில் கிருஷ்ணசாமி, அவரது மனைவி சண்முகவடிவு, அய்யாச்சாமி, சந்தானம் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.