வடக்கு மண்டல முதல்வர்கள் மாநாடு பஞ்சாப் ஹரியானா, இமாச்சல பிரதேசம் , ஜம்முகாஷ்மீர் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல முதல்வர்கள் மாநாடு இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் நடைபெறுகிறது.
ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் முதல்வர்கள் மாநாட்டை பஞ்சாப் மாநிலம் முன்னின்று நடத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில சண்டிகரின் பிரதி நிதியாக அதன் நிர்வாக அலுவலர் பங்கேற்க உள்ளார். இதில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.