மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன்னுடன் பேச விரும்பினால் அவருடன் பேச தயாராக இருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில், தனக்கு ஆதரவளிக்கும்படி, மாநிலம், மாநிலமாக சென்று ஆதரவு கேட்டு வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் ஆதரவிற்காக பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கோல்கட்டாவில் முகாமிட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி, இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. மம்தா பானர்ஜி, தன் ஆதரவு யாருக்கு என்பதை 16ம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.