பிரணாப்புக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி
நிதி அமைச்சர் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டதாக பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக பிரணாபுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனோகர் லால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிரணாப் பிகாருக்கு நிதி உதவி அளித்து உத்தரவிட்டதாக மனோகர் லால் சர்மா குற்றம்சாட்டியிருந்தார்.