சென்னை பஸ் விபத்து : டிரைவர் ஜாமீனில் விடுதலை
சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளான, அரசு பஸ் டிரைவர் பிரசாந்த் மீது மூன்று பிரிவுகளில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
விபத்தில் காயமடைந்த டிரைவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் இளங்கோ, பஸ் டிரைவரை கைது செய்து, உடனடியாக அவரை ஜாமினில் விடுவித்தார்.