நித்தியால் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நீதி வேண்டும்! தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்! ஆர்த்திராவ் தந்தை பேட்டி!
எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம்' என்று நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஆர்த்திராவின் தந்தை சேது மாதவராவ் கூறினார்.
ஸ்பந்தனா ஜனபரா சங்கடேனே' அமைப்பின் பொதுச்செயலாளர் வீணா பெங்களூரில் 22.06.2012 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற சி.டி. இந்தியாவில் உள்ள ஆய்வகத்தில் உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அமெரிக்காவில் தனியார் ஆய்வகத்தில் சி.டி. பொய்யானது என்று நிரூபணம் ஆகி உள்ளதாக கூறுகிறார்கள். இது தவறு.
நித்தியானந்தாவுக்கு அமெரிக்காவில் 14 நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு ஆசிரமத்தில் இருந்து பணம் போகிறது. நித்தியானந்தாவுக்கு சொந்தமாக பல கோடி சொத்துக்கள் உள்ளன.
நித்தியானந்தா மீது ஆர்த்திராவ் 2010ம் ஆண்டில் சி.ஐ.டி. போலீசில் செக்ஸ் புகார் கொடுத்தார். ஆனால், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆர்த்தி ராவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
சில காரணங்களுக்காக ஆர்த்திராவை இங்கு அழைத்து வர முடியவில்லை. விரைவில் அவரை அழைத்து வருவோம். நித்தியானந்தாவுக்கு எதிராக வருகிற திங்கட்கிழமை பொதுநல வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு வீணா கூறினார். அப்போது அவர் நித்தியானந்தாவுக்கு எதிரான ஆவணங்கள் இருப்பதாக கூறி அதை நிருபர்களிடம் காண்பித்தார்.
பேட்டியின்போது, உடன் இருந்த ஆர்த்திராவின் தந்தை சேது மாதவராவ் கூறியதாவது:
நித்தியானந்தா ஆசிரமத்தில் எனது மகள் பல்வேறு சேவைகளை செய்து வந்தார். நானும் கூட ஆசிரமத்தில் சேவை செய்து வந்தேன். ஆனால், இப்போது எனது மகளே நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்டு விட்டார்.
நித்தியானந்தாவின் பக்தை கோபிகாவை 2 ஆண்டுகளாக காணவில்லை. அதேபோல் எனது மகளுக்கும் ஏதாவது ஆகி விடக்கூடாது. அதற்கு முன்பு நீதி கிடைக்க வேண்டும். எனவே நாங்கள் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு சேது மாதவராவ் கூறினார்.