ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம்: இன்று இறுதி முடிவு செய்கிறார்கள்
பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று மாலை, அத்வானி வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சி தலைவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால், இன்று மீண்டும் பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள்.