வங்கி கொள்ளை முயற்சி! ரூ. 6 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது!
ஆத்தூரில் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்கு முயன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அலாரம் மணி ஒலித்ததால் ரூ. 6 கோடி தப்பியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரத்தில் வேளாண்தொடக்க கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இங்கு நகைஈட்டின் பேரில் அப்பகுதிமக்கள் கடன் பெற்றுள்ளனர். இதனால் இந்த வங்கியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள நகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 17.06.2012 நள்ளிரவு மர்ம கும்பல், வங்கியின் கேட்டை கியாஸ் வெல்டர் மூலம் பற்ற வைத்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது வங்கியின் அலாரம் மணி ஒலித்ததால் பீதியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். சம்பவம் அறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜரணவீரன், வங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வங்கி அலாரம் ஒலித்ததால் ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகள் தப்பின.