போலீசார் 100 பேருக்கு ஒரே நாளில் பதவி உயர்வு!
தமிழ்நாடு காவல்துறை 2000ம் ஆண்டு நேரடி சப்இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்த 100 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவர்கள் அனைவருக்கும் இன்று (16.06.2012) அதற்கான முறைப்படியான ஆணை வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் 24 பேர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.