முஷரப் இல்லாமலேயே விசாரணை நடத்த மனு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முஷரப் ஆஜராகாமலேயே பெனாசிர் கொலை வழக்கு விசாரணையை நடத்த அனுமதி கோரி, ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் பாகிஸ்தான் புலனாய்வு துறை மனு தாக்கல் செய்துள்ளது.