நண்பனின் காதலியை மிரட்டி கற்பழித்த வாலிபர்கள் கைது
காதலனுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் படம் எடுத்து இண்டர்நெட்டில் விட்டுவிடுவதாக மிரட்டி நண்பனின் காதலியை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் குயில் (வயது18). . இவத் தென்னங்குடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பரமநல்லூர் ஊரைச் சேர்ந்த சாமிநாதன் (20). கார்த்திக் (21), ராஜதுரை (20) ஆகியோரும் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் மூவரும் நண்பர்கள். குயிலுக்கும், சாமிநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாள டைவில் அது காதலாக மாறியது. இந்த நிலையில் ஒருநாள் கணபதிபுரம் மரவாடி அருகே உள்ள புளியமரத்தடிக்கு வருமாறு குயிலை சாமிநாதன் அழைத்தார்.
அதன்பேரில் குயிலும் அந்த பகுதிக்குச் சென்றார். அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்தாக தெரிகிறது. பின்னர் சாமிநாதன் தான் முன்னே செல்வதாகவும், சிறிது நேரம் கழித்து போகும்படி குயிலிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து குயிலும் சாமிநாதன் சென்ற சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கார்த்திக்கும், ராஜதுரையும் வந்தனர். அவர்கள் குயிலிடம் நீயும், சாமிநாதனும் நெருக்கமாக இருந்ததை மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்திருக்கிறோம், எங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும்.
இல்லை என்றால் சாமிநாதனுடன் நீ உல்லாசம் அனுபவித்த ஆபாச படத்தை இண்டர்நெட்டில் விட்டு மானத்தை வாங்கி விடுவோம் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கலங்கி போன குயில் முதலில் மறுத்தாலும் பின்னர் இருவரின் ஆசைக்கும் இணங்க ஒப்புக் கொண்டார். இதனையடுத்து கார்த்திக்கும், ராஜதுரையும் மாறிமாறி குயிலிடம் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குயில் கர்ப்பம் அடைந்தார். இதனால் பயந்து போன அவர் கர்ப்பத்தை கலைப்பதற்காக மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இருப்பினும் கர்ப்பம் கலையவில்லை. சென்ற மாதம் 31-ந் தேதி அன்று குயிலுக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து போனது. அப்போது குயிலுக்கு திடீரென ரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டது. உடனடியாக அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இதுகுறித்து குயில் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சாமிநாதனை கைது செய்து விசாரித்தனர். அப்போது சாமிநாதன் குயிலின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என்று மறுத்தார்.
இதனையடுத்து போலீசார் குயிலிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ராஜதுரையும், கார்த்திக்கும் தன்னை மிரட்டி கற்பழித்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து போலீசார் ராஜதுரையையும், கார்த்திக்கையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.