வருமான வரி அதிகாரிகள் என்று கூறி பல லட்ச ரூபாயை சுருட்டிய 5 பேர் கைது
சென்னையில் வருமான வரி அதிகாரிகள் என்று கூறி சோதனையிட்டு பல லட்ச ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடிய 5 பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் வேலூரைச் சேர்ந்த முருகன் என்பவன் 2003ம் ஆண்டு இதேப்போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் வேலூர் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் ரொக்கப் பணமும், காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.