தென்மேற்கு பருவ மழை 5-ல் தொடங்கும் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் 2 மாதமாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால்தான் தமிழகத்தில் வெப்பம் குறையும். வழக்கமாக தென்மேற்கு பருவ மழை மே மாத கடைசியில் அல்லது ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 5-ந்தேதிதான் பருவ மழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை தொடங்கினால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட த்தில் மழை பெய்யும். இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்பம் குறையும். அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் தமிழ்நாட்டில் வெயில் கொடுமை நீடிக்கிறது. வெயிலால் அவதிப்படும் மக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். சென்னையில் வெயில் தொடர்ந்து நீடித்தாலும் வெப்பமும், அனல் காற்றும் குறையும். தென் மேற்கு பருவ மழை தொடங்கும்போது கேரளாவில் மழை பெய்தால் குற்றாலத்திற்கு தண்ணீர் வரும். குற்றால சீசன் தொடங்கி விடும்.